தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

நீரிழிவு நோயாளிகளை தாக்கும் மூட்டுவலி


நீரிழிவினால் ஏற்படும் பல நோய்கள் போதாதென்று, இப்பொழுது இந்த லிஸ்ட்டில் மூட்டு வலியும் சேர்ந்து விட்டது. நீரிழிவு நோயாளிகளில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. காரணங்கள் சரிவர தெரியாவிட்டாலும், இரண்டு வியாதிகளுக்கும் பொதுவான உடல் எடை அதிகரிப்பு காரணமாகலாம்.
அதிக உடலுழைப்பு இல்லாதவர்கள் அதிகமாக இரண்டு வியாதிகளாலும் தாக்கப்படுகிறார்கள்.
நீரிழிவு சிகிச்சையில் ஒரு முக்கிய அம்சம் – உடலுழைப்பு, உடற்பயிற்சி, எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபடுவதும் ஆகும். இந்த உடலை சுறு சுறுப்பாக வைத்திருப்பது, ஆர்த்தரைடிஸால் கடினமாகும். ஆனால் மருத்துவர்கள் உடற்பயிற்சி, நடப்பது, நீச்சல் போன்றவற்றை, மூட்டுவலி, நீரிழிவு இரண்டும் சேர்ந்த நோயாளிகள் கைவிடக் கூடாது என்கின்றனர்.
மூட்டுவலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்தால் வலி அதிகமாகும் என்று கருதுபவர்கள். ஆனால் மருத்துவர்கள் வலி தொடக்க நிலையில் ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும், உடற்பயிற்சியைக் கைவிடக் கூடாது என்கின்றனர்.
வாரத்திற்கு மூன்று நாட்களாவது “நடைப்பயிற்சியில்” ஈடுபட வேண்டும். 10 நிமிடங்கள் என்று ஆரம்பித்து, 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். உடல் எடை குறைந்தால் மூட்டுவலியும் குறையும்.

No comments:

Post a Comment