தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

தாழ்நிலை சர்க்கரை ஹைபோகிளைசீமியா


சர்க்கரை நோயின் கடுமையான மறுபக்கம் – திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவது. இது உயிருக்கு ஆபத்து. டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும். இதை ‘ஹைபோகிளைசீமியா’ என்கிறார்கள்.
சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லி கிராம்/ டெஸி லிட்டர் வரை இருக்கலாம். இந்த நிலை குறையவும் கூடாது. கூடவும் கூடாது. இதில் மாற்றம் ஏற்படும் காரணங்கள்:-
1. இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் ‘டோஸ்’ அதிகமானால்
2. பட்டினியிருந்தால், அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேர இடைவெளி நேர்ந்தால்
3. உடற்பயிற்சி அதிகமானால்
4. சில மருந்துகள். நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் கூட ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.
5. கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த உணவுகள். சில உணவுகளை (ப்ருக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்க முடியாமல் போதல்
6. வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள்
7. அபூர்வமாக கணையத்தில் கட்டி (இதனால் அதிக இன்சுலீன் சுரக்கும்) அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது.
ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை நேரங்களிலும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே ‘எபினெப்ரின்’
என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ‘ரிலீஸ்’ செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.
ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். பழச்சாறு கூட கொடுக்கலாம். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும். பிறகு ரொட்டி போன்றவற்றை தரலாம்.
இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிகநேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.
ஹைபோகிளை சீமியா டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது.
இந்த அபாயகரமான நிலை, ஒரு ‘வாய்’ சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவும்.
தாழ்நிலை, சர்க்கரை, ஹைபோகிளைசீமியா, சர்க்கரை நோய், ரத்தத்தில், ஹைபோகிளைசீமியா, இன்சுலின், உடற்பயிற்சி, மருந்துகள், நீயுமோனியா, க்வுனைன், கார்போஹைடிரேட்ஸ், உணவுகள், மது அருந்துவது, கணையம், அட்ரீனலின், பிட்யூடரி, எபினெப்ரின், ஹார்மோன், அட்ரீனல் சுரப்பி, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு, மனக்குழப்பம், தலைவலி, கண்பார்வை மங்குதல், சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா,
மூளை,
தாழ்நிலை சர்க்கரை ஹைபோகிளைசீமியா
சர்க்கரை நோயின் கடுமையான மறுபக்கம் – திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவது. இது உயிருக்கு ஆபத்து. டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும். இதை ‘ஹைபோகிளைசீமியா’ என்கிறார்கள்.சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லி கிராம்/ டெஸி லிட்டர் வரை இருக்கலாம். இந்த நிலை குறையவும் கூடாது. கூடவும் கூடாது. இதில் மாற்றம் ஏற்படும் காரணங்கள்:-
1. இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் ‘டோஸ்’ அதிகமானால்
2. பட்டினியிருந்தால், அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேர இடைவெளி நேர்ந்தால்
3. உடற்பயிற்சி அதிகமானால்
4. சில மருந்துகள். நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் கூட ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.
5. கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த உணவுகள். சில உணவுகளை (ப்ருக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்க முடியாமல் போதல்
6. வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள்
7. அபூர்வமாக கணையத்தில் கட்டி (இதனால் அதிக இன்சுலீன் சுரக்கும்) அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது.
ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை நேரங்களிலும் ஏற்படலாம்.
அறிகுறிகள்
சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே ‘எபினெப்ரின்’ என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ‘ரிலீஸ்’ செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.
ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். பழச்சாறு கூட கொடுக்கலாம். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும். பிறகு ரொட்டி போன்றவற்றை தரலாம்.
இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிகநேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.
ஹைபோகிளை சீமியா டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது.
இந்த அபாயகரமான நிலை, ஒரு ‘வாய்’ சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment