தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Tuesday, April 10, 2012

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)


பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?
பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது  'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால்  பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின்  பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.
2009-ம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத ஆரம்ப கால கட்டத்தில், தெற்கு கலிபோர்னியா மற்றும் டெக்ஸாஸ்க்கு அருகில் உள்ள சேன் ஆன்டோனியோ ஆகிய இடங்களில் ‘A’ ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா  (H1N1) வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை அளிப்பது முதன்முதலில் அறியப்பட்டது.அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது கண்டறியப்பட்டது. பின்னர் உலக அளவிலும் இது கண்டறியப்பட்டது.
மனிதனிடம் பன்றி காய்ச்சல் உள்ளதைக் காட்டும் அறிகுறிகள் என்ன?
மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன்தான் ஸ்வைன் ப்ளூ நோயும் வரும். வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும்  வயிற்று போக்கும் ஏற்படக்கூடும்.
கடந்த காலங்களில் இந்நோய்வாய்ப்பட்டவர்களிடம் கடுமையான அளவில் உடல்நிலை பாதிப்பும் (நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு) உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ப்ளூ காய்ச்சலைப் போலவே,  ஏற்கனவே இருக்கும் நோய்களையும் வலிகளையும் இந்நோயும் தீவிரப்படுத்தும்..
இத்தகைய ப்ளூ வைரஸ்கள் தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியவை. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது எப்படி பரவும்?
இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இந்நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய ஒரு நாள் முதல் நோய்வாய்ப்பட்ட 7ம் நாளுக்குள் மற்றொருவருக்கு இந்நோய் தொற்றக்கூடும். அதாவது ஒருவருக்கு இந்த ஸ்வைன் நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவும், நோயில் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொழுதும் இந்நோய் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவிவிடும்.
நோய் எனக்கு தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதல் மற்றும் முக்கிய செயல்: உங்களின் கைகளைக் கழுவுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்கவும். நன்றாக தூங்கவும். சுறுசுறுப்பாக இருக்கவும். மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப்பளுவை முறையாகக் கையாளுங்கள். அதிக அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து உள்ள உணவை உண்ணுங்கள். ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருள்களையும் பகுதிகளையும் தொடாதீர்கள். இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்.
ஸ்வைன் நோய் எனக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஸ்வைன் நோய் வராமல் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் இல்லை. இன்ப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களை உருவாக்கக்கூடிய கிருமிகள் பரவாமல் தடுக்க ஒவ்வொரு நாளும் சில செயல்முறைகளைக் கடைபிடித்தல் அவசியம்.
ஸ்வைன் நோய் வராமல் தடுத்து  ஆரோக்கிய வாழ்வு வாழ.....
  • இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமலுக்கு பின் சோப் & தண்ணீர் கொண்டு கைகளை நன்கு கழுவவும்.ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளை சுத்தப்படுத்துதலும் நல்லது.
  • கண்கள், வாய், மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும். கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவும்.
  • இவ்வியாதி உள்ளவரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்
  • உங்களுக்கு இன்ப்ளூயன்ஸா நோய் இருந்தால், தயவு செய்து வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.
இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சிறந்த வழி என்ன?
உங்களுக்கு இந்நோய்  இருந்தால், முடிந்த அளவிற்கு பிறருடன் தொடர்பு கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும் . வேலை மற்றும் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கவும். இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வாய் & மூக்குப் பகுதிகளை திசுத்தாள் வைத்து மூடிக்கொள்ளவும்.
இது உங்களைச் சுற்றி உள்ளவருக்கு இந்நோய் தாக்காமல் இருக்க உதவும்.பயன்படுத்திய திசுத்தாளை குப்பைக்கூடையில் போடவும். திசுத்தாள் இல்லை என்றால், இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் கைக்குட்டை அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ளவும். பிறகு, கைகளை நன்கு கழுவவும். ஒவ்வொருமுறையும் இருமல் மற்றும் தும்மலுக்கு பிறகு கைகளைக் கழுவவும்.
நோய் வராமல் தடுக்க கைகளைக் கழுவி சுத்தப்படுத்த சிறந்த முறை என்ன?
அடிக்கடி கை கழுவுதல் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். சோப் & தண்ணீர்  அல்லது ஆல்கஹால் (அல்லது வேதிப்பொருட்கள்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கைகளைக் கழுவவும். சோப் & சுடு தண்ணீர் கொண்டு கழுவும்பொழுது 15 முதல் 20 நொடிகளுக்கு கழுவவும். சோப் & தண்ணீர்  இல்லாத பொழுது, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்போசபல் கையுறைகள் (ஒரு முறை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எறிந்து விட வேண்டும்) அல்லது ஜெல் வகை அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தலாம். இவைகள் மருந்து கடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஜெல்லைப் பயன்படுத்தினால் ஜெல் முற்றிலும்  காய்ந்து கைகள் ஈரமின்றி இருக்கும்படி கைகளை நன்றாக உரசித்தேய்க்கவும்.ஜெல்லைப் பயன்படுத்திடும் பொழுது தண்ணீர் தேவையே இல்லை. ஜெல்லில் உள்ள மருந்து பொருட்களே கைகளில் உள்ள கிருமிகளைக் கொன்றுவிடும்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் இருப்பதாகவும் உணர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும்.
குழந்தைகளாக இருப்பின்....
  • வேகமாக சுவாசித்தல் (இளைப்பு )அல்லது சுவாசிக்க சிரமப்படுதல்.
  • தோல்களில் நீல நிறம் கலந்த தோற்றம்.
  • அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
  • பிறரிடம் கலந்து பேசாமல் பழகாமல் இருத்தல் அல்லது படுத்தபடியே சோர்வாக இருத்தல்.
  • குழந்தைகளைத் தூக்கும் பொழுதும் கட்டி அணைக்கும் பொழுதும் அசெளகரியத்தையும் எரிச்சலையும் காட்டுவார்கள்.
  • ப்ளூ வருவதற்கான அறிகுறிகள் அதிகரிக்கும் ஆனால் காய்ச்சல் மற்றும் மோசமான சளி, இருமலுடன் நின்றுவிடும்.
  • தோலில் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய காய்ச்சல்
பெரியவர்களுக்கு.........
  • சுவாசிக்க சிரமப்படுதல் அல்லது மூச்சுத்திணறல்
  • மார்பு அல்லது வயிறு பகுதிகளில் வலி அல்லது அழுத்தமான உணர்வு
  • தீடீர் மயக்கம்.
  • தடுமாற்றம்.
  • கடுமையான அல்லது தொடர்ந்த வாந்தி

Sunday, January 8, 2012

மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு


மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு நாகர்கோவிலில் 08.01.2012 அன்று தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்,சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,டிரீம்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தியது.
                     
                       இதில் கல்வி தந்தை டாக்டர் சதாசிவம் தலைமை தாங்கினார்.டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றார்.டாக்டர் அருள் குமரேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் சிதம்பர நடராஜன்,டாக்டர் ஜெனிபர்,டாக்டர் வர்கீஸ் ஆகியோர் பேசினர்.முடிவில் ஞானசிகாமணி நன்றி கூறினார்.





















Tuesday, November 8, 2011

நீரிழிவை யோகத்தால் கட்டுப்படுத்தலாம்


பெங்களூரில் செயல்பட்டுவரும் சுவாமி விவேகானந்தா யோக ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் இணைந்து “நீரிழிவை யோகத்தால் கட் டுப்படுத்தலாம்“ என்ற கருத்தரங்கத்தை ஜனவரி 23ம் தேதியன்று சென்னை ஃப்லிம் சேம்பர் அரங்கத்தில் நடத்தின.
இருதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலம் விழாவை தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். “எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதே நமது உடனடி தேவை” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தணிகாசலம்.\

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கினைப்பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மாணிக்கவாசகம் உரையாற்றினார். “நீரிழிவில்  இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் சுரக்காமல் போவதை முதல் வகை என்கிறோம். இதை யோகாவால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனால் இரண்டாம்  வகை நீரிழிவை தொடர்ந்து யோகப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தேசிய சித்த மருத்துவம் ஒவ்வொரு புதன் கிழமையும்  நோயாளிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் யோகப்பயிற்சியை நடத்திவருகிறது. இரண்டாம் வகை நீரிழிவை எண்பது சதவீதம் முன்கூட்டியே தடுக்க முடியம் என் பதால் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவம் ஆகும்“ என்றார் மாணிக்கவாசகம்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தன் பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்தார். “எண்ணியல், எழுத்தியல், அளவீட்டியல், வானவியல் போல  சித்தவியலும் தமிழர்களின் பாரம்பர்யமான அறிவியல் அறிவு. இடகலை, பிங்கலை, சுழுமுனை போன்று பல தமிழ் வார்த்தைகள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுவிட்டன. இந் தியாவில் வேத மரபு, தாந்த்ரீக மரபு என்று இரண்டு உள்ளது. சித்த மருத்துவம் தாந்ந்ரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார் ஆனந்தன்.
நீரிழிவைக்குறித்த டாக்டர் சிவராமனின் “ஏழாம் சுவை” நூலை த.உதயச்சந்திரன் வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டவர், பெற்றுக்கொண் டவர் இருவருமே தங்களுக்கு நீரிழிவு இருப்பதாகச் சொன்னது சுவாரஸ்யம்.
“யோகம் ஆன்மீகத்திற்குள் அடங்காது. அது ஒரு தத்துவம். யோக மரபு கடவுள் மறுப்பாளர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்டது” என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்  சிவராமன். அதுசரி... அது என்ன ஏழாம் சுவை? உணவின்மீதான அக்கறையைத்தான் இன்னொரு சுவையாக அடையாளப்படுத்தியிருக்கிறார் டாக்டர் சிவராமன்.
பேராசிரியர் நாகரத்னா யோகாதெரபியின் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இயக்கத்தைப்பற்றி அறிமுகப்படுத்தியதோடு பார்வையாளர்களுக்கு சில எளிய பயிற்சிகளையும்  கற்றுக்கொடுத்தார். டாக்டர் வெற்றிவேந்தன் நீரிழிவு நோய்க்கான சில யோகப்பயிற்சிகளை பயிற்றுவித்தார்.

டாக்டர் சோனா நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறைகளை பரிந்துரை செய்தார். “நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் அரிசி உணவு உண்ணக்கூடாது, ஆனால் கோதுமை  உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது சரியானதல்ல. அரிசி, கோதுமை இரண்டுமே ஒரே மாதிரியான கார்பாஹைட்ரேட்டையே வழங்குகின்றன.
கனிவகைகளை உண்ணக்கூடாது என்பதும் தவறானது. கனிவகைகளை உண்பதன் மூலம் நார்ச்சத்து கிடைப்பதோடு இரத்த சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இ ருக்கும். கேழ்வரகைப் பயன்படுத்துவதாலும் நீரிழிவை கட்டுப்படுத்திவிட முடியாது. அதுவும் அரிசி, கோதுமையைப் போலவே கார்போஹைட்ரேட்டைத்தான் கொடுக்கிறது.  மிக முக்கியமாக எந்த உணவுமுறையாலும் நீரிழிவை முற்றிலும் கட்டுப்படுத்திவிட முடியாது, கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும்“ என்று நீரிழிவு பற்றி சொல் லப்படும் பல கருத்துகளில் உண்மையில்லை என்று அவரது உரையில் வலியுறுத்திப் பேசினார். 
நீரிழிவு மருத்துவத்தில் சித்த மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் பாலாஜி நிகழ்ச்சியின் இறுதியில் பேசினார். இ ன்சுலின் பணியை துரிதப்படுத்தும் மெட்போர்மின் மருந்து ப்ரெஞ்ச் லைலாக் என்ற தாவரத்திலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. அலோபதி மருத்துவத்திற்கும்  தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறுகள் அடிப்படையாக இருக்கின்றன. அலோபதி மருத்துவமே தாவரத்திலிருந்து ஒரு மூலக்கூறை எடுத்து பயன்படுத்தும்போது  சித்த மருத்துவத்தில் அதற்கு இணையாக பல மூலிகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம் என்றார் பாலாஜி.
 அப்படி மருத்துவக் கணங்கள் கொண்ட மூலிகைகள் என்னென்ன என்று அறிந்துகொள்ள ஆசையா? வசம்பு, வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய், பார்லி, வசம்பு,  வலம்புரிக்காய், வெள்ளரிக்காய், சிவப்பு சந்தனம் என்று தொடர்கிறது பட்டியல்.
சித்த மருத்துவத்தில் யோகம், வைத்யம் இரண்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பக்க விளைவுகள் இல்லாத மாற்று மருத்துவ த்தின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்


நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் தினம்


சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான
சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு
சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம்
உண்ணும் உணவுதான் செரித்து
குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ்
ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள
அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்
”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ்
செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான
இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத
 போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல
முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து
விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் 
பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் 
ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ்
செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் 
இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை 
மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு 
சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 
140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை 
நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக 
அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். 
சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் 
அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
    கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான ப
சி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி
மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும்
பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை.
சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள்
மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும்.
இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது
இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண்
ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது,
களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால்
அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும்
தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்)
சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை
நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல
உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல்
கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள்,
பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து
போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட
தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு
போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர்,
சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய்,
வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ்,
அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை,
அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து
கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி,
டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.

3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்
சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது)
அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா
(சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம்,
பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2,
அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25,
தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய்,
சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏ
தேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும்,
மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து 
கிழங்கு வகைகள், இனிப்பு 
பதார்த்தம், சர்க்கரை, 
வெல்லம், கல்கண்டு, தேன், 
குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், 
, ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு 
நிறைந்த பிஸ்கெட், 
பால்கோவா,  ஜெல்லி, 
பூஸ்ட், ஹார்லிக்ஸ், 
போன்விட்டா, பாட்டில்களில் 
வைத்து விற்கப்படும் 
பழச்சாறு மற்றும் 
குளிர்பானங்கள், 
வெண்ணெய், நெய், டால்டா, 
தேங்காய் எண்ணெய், 
பாமாயில், எண்ணெய் அதிகளவில் 
சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், 
முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற 
அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.



மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல்
ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட
நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ,
உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.

Friday, November 4, 2011

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி- பத்திரிகை செய்திகள்




ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் A.P.அருள் குமரேசன் செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174










ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி





ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி 30-10-2011 அன்று நாகர்கோவிலில் வைத்து நடந்தது. INDIAN SCHOOL OF YOGA- CHENNAI இயக்குனர் டாக்டர் A.S.அசோக்குமார் ஆல்ஃபா பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் பிராணாயாமம், கபாலபதி கிரியை,யோக சக்கரங்கள்-7,ஆழ்நிலை முச்சு பயிற்சி,ஆல்ஃபா தியானம் செய்முறை பயிற்சி அளிக்க பட்டது.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பயிற்சிக்கான ஏற்பாட்டை சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் குமரேசன்செய்திருந்தார்.

ஆல்ஃபா ஆழ்மனசக்தி தியான பயிற்சி பெற தொடர்பு கொள்க -94436-07174