தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Saturday, November 3, 2012

செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS


செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி           SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS



பயிற்சியின் நோக்கம்

♀♥♂   பாலுணர்வு, குழந்தைபேறு சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல் உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு முறை இவற்றை அறிவியல் ரீதியாகக் புரிந்துகொள்ள செய்தல்.

 ♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு, பாலியல் குற்றங்களை களைய செய்யும் வழிவகைகள்.

♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற, வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன் வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும் தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க...  இனிய தாம்பத்யம் பெற செக்ஸ் ஆலோசனைகள்.

♀♥♂  திருமண முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)

                    பாடத்திட்டம்

۞ பாலியல் மருத்துவ வரலாறு ۞ ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் - செயல்பாடுகள் ۞ சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி பாலியல் மருந்துகள்பாலியல் குறைபாடு - நலம் ۞ செக்ஸ் யோகா & எக்ஸஸைஸ் ۞ மாஸ்டர்ஸ் & ஜாண்சன் செக்ஸ்  மேனுவல் ۞  மருந்து மாத்திரையில்லாமல்
செக்ஸ் சக்தி பெறும் வழிகள் ۞ பாலியல் கலைகள் ۞ மனநலம் - வரலாறு ۞ பாலியல் பிரச்சனைகக்கான ஆலோசனை வழங்கும் வழிமுறைகள் ۞   தம்பதிகளின் மனோதத்துவம் ۞ மனநல சிகிச்சை முறைகள் ۞ திருமணம் மற்றும் குடும்ப ஆற்றுப்படுத்துதல்.


பாலியல் ஆலோசகர் பயிற்சி - இப்படிப்பின் பயன்கள்

♀♥♂  பாலியல் ஆலோசகர் (Sex Therapy) பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது.

♀♥♂ குடும்ப நல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த உங்களை உயர்த்திக் கொள்ளலாம்.

♀♥♂ திருமண தம்பதியர்களில் பலர் தங்களது இல்லற பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமையால் பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதன் பலனாக அவர்கள் விவாகரத்து தேடி நீதி மன்றம் செல்கின்றனர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க ஆட்கள் தேவை. இந்த ஆலோசகர் தகுந்த கல்வி தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு இந்த பயிற்சி வழிவகுக்கும்.

♀♥♂ உங்களது ஆளுமையை அதிகரிக்கலாம், பாலியல் விழிப்புணர்வை தனக்கு தாமே பெற்றுக்கொள்ளலாம்.

♀♥♂  வாழ்வில் ஆரோக்கிய செக்ஸ் ஹெல்த் பெறவும், வாழ்வில் மேன்மையடையும் வாய்ப்புகள் மிகுதியாகும்.

♀♥♂ இப்படிப்பை முடித்தவர்கள் தங்களது நடப்பு பணிகளைச் சிறப்பாகச் செய்வதுடன், சுற்றத்தவர், நண்பர்கள், வாடிக்கையாளாளர் மற்றும் பிறரை இன்னும் திறம்படக் கையாள முடியும்.

♀♥♂ பயிற்சி முடித்தவர்களுக்கு மேல்படிப்புக்கும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கி நடத்த ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

படிப்புக் காலம் (Course Duration)

ஆறு மாதங்கள், விரைவான முறை 4 மாதங்கள்

யார் சேரலாம் - (Who can join )

♀♥♂ பாலியல் கல்வியை புரிந்துகொள்ள, விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.

♀♥♂ குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள், திருமணத்திற்கு தயாராகும் நபர்கள், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள் யாவரும் சேரலாம்.

♀♥♂  பாலியல் குறைபாட்டிற்கு மருத்துவம் செய்பவர்கள், பிற துறையில் ஆலோசனை வழங்குபவர்களும் இதில் சேர்ந்து சிறப்பு தகுதி பெறலாம்.

எப்பொழுது சேரலாம்,

எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்றே சேருவது நன்று, சேர்ந்த நாளிலிருந்து பயிற்சி காலம் தொடங்கும்.
இந்த பிரிவுக்கான கடைசி தேதி …………………………………………...
பயிற்சி பாட புத்தகங்கள்

படிப்புக் கட்டணம் செலுத்தியதும் அறிஞர் குழு தயாரித்த நான்கு பிரிவு பாடதொகுப்புகள் வழங்கப்படும், பாடங்கள் அனைத்தும் பாலியல் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட பாட தொகுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி பாடங்களை முழுமையாக படித்தப் பிறகு நாங்கள் தபால் வழியாக கேட்கும் வினாகளுக்கு பதில் எழுதி அனுப்ப வேண்டும். இதற்கு மதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.


பணிப்பயிலரங்கம் - Workshop (Practical Counselling Class)

கேள்வி - பதில் எழுதி அனுப்பியவர்களுக்கு ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் பாலியல் ஆலோசகர்களுக்கான புதிய அணுகுமுறைகள், செக்ஸ் கல்வி, பாலியல் மனநல ஆலோசனையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் நேரடியாக நடத்தப்படும். பயிற்சி வகுப்பினை பாலியல் வல்லுணர்கள் மூலம் நடத்துவார்கள். பயிற்சி வகுப்பானது காலை 10.00 முதல் மாலை 4.00 மணி வரை நடக்கும்.

படிப்புக்கட்டணம் (Course Fees)

மொத்த பயிற்சி கட்டணம் ரூ 4,000/- மட்டும்

தவணை முறையில் பணம் செலுத்த விரும்பினால் 2200 + 2200 என இரு தவணைகளில் செலுத்தலாம்.

பணிப்பயிலரங்க கட்டணம்

 ரூ.750/- (காலை, மாலை தேனீர், மதிய உணவு, பயிற்சி குறிப்பேடு உட்பட) கட்டணத்தை DD ஆக ”SOLAR CHARITABLE TRUST” எனும் பெயரில் NAGERCOIL-ல் மாற்ற தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது SBI வங்கியில் செலுத்தலாம்.

 Name:A.P. Arul Kumaresan - A/C No - 10843391057


மதிப்பீடும் முடிவும் Evaluation & Result

சமர்ப்பிக்கப்படும் விடைத்தாள்கள் மற்றும் சுய பயிற்சி நோட்டு, நேரடி பணிப்பயிலரங்கில் பங்கேற்பு மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு அமையும் வெற்றி பெற்றவர்கள் படிப்பின் இறுதியில் சான்றிதழ் (CSTCS) பெறுவர்கள்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டியவை

♀♥♂ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதோடு சமீபத்திய புகைப்படத்தை ஓட்டி, விண்ணப்பத்துடன் இரண்டு தனி புகைப்படங்களை இணைத்து அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

♀♥♂ தங்களது கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின் நகல் இணைக்கவும்.

♀♥♂ கேட்பு வரைவோலை DD,Cheque வங்கி ரசீது இணைத்து அனுப்பி வைக்கவும்.

♀♥♂ அனுப்ப வேண்டிய முகவரி

 THE DIRECTOR,
 SOLAR SSE,
 Roy Complex,Krishnancoil,
 NAGERCOIL - 629 001.
 KANYAKUMARI DIST.
 CELL- 3967511133,9443607174.









                                   DR A.P.ARUL KUMARESAN, MS (Coun & psy),MSC(Psy),
                                                                                              DPFR,CAMSH,Ph.D.,
                                                        DIRECTOR - SOLAR

Tuesday, October 16, 2012

டெங்கு காய்ச்சல் தீர



முதலில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கு புதிதல்ல.பழைய ஆனந்த விகடனை எடுத்துப் பார்த்தால் அதில் பல வருடங்களுக்கு முன் வெளியான ( 1967 முதல் 1969 வரை ) சிரிப்புக் கி ( டெங்கு ) என்ற பெயரில் பல சிரிப்புக்களையும் , கார்ட்டூன்களையும் வெளியிட்டுள்ளது. என்னிடம் அந்தப் புத்தகங்கள் உள்ளது .தேடிக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.
அப்போது இது எதனால் உருவாகிறது ? ஈடிஸ் கொசு கடிப்பதனால் கிருமிகள் பரவி அதன் மூலம் காய்ச்சல் உண்டாகி என்று நீண்டு கொண்டே செல்கிறது அல்லோபதி கதை. இதைவிட இந்தக் கொசுவைக் கொல்ல அடிக்கும் புகைப்பானில் தெளிக்கும் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் அப்பப்பா சொல்ல முடியவில்லை . இந்தக் கொசுவைக் கொல்வதனால் இந்தக் காய்ச்சலை ஒழிக்க முடியுமா ??? வீட்டில் பத்து பேர் இருந்தால் ஒருவருக்கோ இருவருக்கோ மட்டும் காய்ச்சல் வருகிறது . முதலில் இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வருகிறது.
ஒரு விளம்பரம் கூறுகிறது . தற்போது கிருமிகள் பலமாக மாறிக் கொண்டே வருகின்றன ( நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமலே சொல்லி விடுகின்றனர் ). எனவே உங்களுக்குத் தேவை பலமான கிருமி நாசினி என்று !!! இன்னோர் விளம்பரத்தில் ஒரு பையன் எங்க மம்மி சொல்றாங்க ஒரு நிமிடம் நம்ம கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் ???? என்று அதற்கு ஒரு பெண் கூறுகிறாள் உன் சோப்பென்ன ஸ்லோவா ??? இவர்கள் என்ன சொல்கிறார்கள் . கிருமிகளைக் கொல்லும் அந்த வேதிப் பொருள் நம் கையிலுள்ள நம் உயிரணுக்களை விட்டு வைக்குமா ????? கிருமிகளை உலகத்தை விட்டே அழித்துவிடலாம் என்கிறார்களா என்ன ???
இதை சாதாரண எந்த உயிரி விஞ்ஞானியும் ஒப்புக் கொள்ள மாட்டார் !!! கிருமிகளை உலகத்தை விட்டோ கேவலம் நம் வீட்டை விட்டோ ஒழிக்க முடியாது .அப்படி ஒரு வீட்டை ஆக்கினால் அந்த வீடு நாமும் வாழத் தகுதியற்றதாக ஒரு விஷமித்த வீடாகத்தான் ஆகிவிடும்.
மீதமுள்ள ஆட்களுக்கு இந்த பயத்திலேயே இது தொற்றிவிடுகிறது . பயத்தினால் காய்ச்சல் பரவுமா ??? நிச்சயமாக ??? பயமே வியாதியை அதிகரிக்க உற்ற துணை !!! ஏனெனில் பீனியல் சுரப்பியின் செயல்பாடு பயம் ஏற்படும் போது குன்றி அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகின்றது.
இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள். உங்கள் வீட்டை முதலில் நீங்கள் நல்ல உயிரினங்கள் வாழும் வீடாக மாற்ற முதலில் நாட்டு மருந்துக் கடையில் சிங்கப்பூர் சாம்பிராணி , நில வேம்புக் குடிநீர் என்று குச்சி குச்சிகளாக அட்டைப் பெட்டியில் அடைத்தது IMPCOPS  தயாரிப்பு கிடைக்கும்.இவற்றை வாங்கி கலந்து கொண்டு முடிந்தால் அத்துடன் குப்பை மேனிப் பொடியும் ,வேப்பிலைப் பொடியும் கலந்து புகை போடுங்கள்.
வீட்டை நல்ல காற்றோட்டமாக திறந்து வையுங்கள் .ஒரு கொசுவும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. நீங்கள் ஆவாரை இலைப் பொடி , வேப்பிலைப் பொடி , குப்பை மேனிப் பொடி கலந்து குளிக்கும் போது மேலுக்குத் தேய்த்துக் குளியுங்கள் . ஒரு கொசுவும் உங்களை அண்டாது . கசப்பு உங்களுக்குப் பிடிக்காதது போல எந்தக் கிருமிக்கும் பிடிக்காது. ஒரு கிருமியும் அண்டாது. சோப்பு போட்டு குளிக்கக் கூடாது . பிறகேது காய்ச்சல் .
இது சொல்லி முடித்தவுடன் சோப்பு எப்போது போடலாம் என்று கேட்பது புரிகிறது . சோப்பு போட்டால் உங்கள் உடலில் தோலில் உள்ள அனைத்து    எண்ணைச் சுரப்பிகளும் வறண்டுவிடும் .தோல் வறண்டு விட்டால் உடலின் மீது ஓடும் உயிரோட்டமான `CHI ‘ ஓடாது . இந்த உயிரோட்டத்தில் ஏற்படும் மின் சுற்றுப் பூர்த்தி ஆகாததை சரி செய்வதே அக்கு பஞ்சர் . ஊசி மூலம் அந்தச் மின் சுற்றை ஏற்பட செய்வார்கள் . ஒரு இடத்தில் உயிரோட்டம் அற்றால் பூர்த்தி செய்யலாம் உடலெல்லாம் பல இடங்களில் மின் சுற்று அற்றால் , அதாவது உடலின் ஒட்டு மொத்த உயிரோட்டத்தையே சோப்புக்கள் குன்ற வைத்துவிடும் , எனில் இது தேவையா ??? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!
இருக்கும் இடத்தைச் சரி செய்தாயிற்று. அதற்குப் பிறகு உடலை விஷமிக்காமல் அதாவது அலோபதி மருந்துகளை உட்கொள்ளாமல் இருங்கள் . வீட்டில் அறைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு புகை வராது என்று கூறப்பட்ட விஷக் ( அல்லெத்ரின் என்ற விஷத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது ) கொசு வர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தூங்காதீர்கள் . காற்றோட்டமான இடத்தில் தூங்குங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.சாறுள்ள பழங்களை காலையிலும் மாலையிலும் உண்ணுங்கள் . பழச் சாறாக்கி பிழிந்து எடுத்து சாப்பிடாதீர்கள் . இளநீர் அடிக்கடி சாப்பிடுங்கள். மதியம் ஒரு நேரம் மட்டுமே அரிசி உணவை எடுத்துக் கொள்ளுங்கள் .அதுவும் கஞ்சி வடிகட்டின சோறாக இருப்பது நலம் .குக்கர் அரிசிச் சோற்றை தவிருங்கள் .
இதெல்லாம் போக காய்ச்சல் வந்தால் கீழுள்ள மருந்தை உபயோகியுங்கள் .
( 1 ) விஷ்ணு கிராந்திப் பொடி
( 2 ) பற்பாடகப் பொடி
( 3 ) குப்பை மேனிப் பொடி
( 4 ) நில வேம்புப் பொடி
( 5 ) ஆகாச கருடன் கிழங்குப் பொடி
( 6 ) வாய் விளங்கம்
( 7 ) சங்கங் குப்பி
( 8 )  நத்தைச் சூரி விதை
( 9 ) மாவிலங்கப்பட்டை
( 10 ) கடுகு ரோகணி
( 11 ) அக்கரகாரம்
( 12 ) கோஷ்டம்
( 14 ) செப்பு நெருஞ்சில்
( 15 ) விராலியிலை
( 16 ) நொச்சிப் பட்டை
( 17 ) வேப்பம் பட்டை
( 18 ) மஞ்சள்
இவை கலந்து அரை குறையாக இடித்து வைத்துக் கொண்டு மூன்று   நாட்கள் மூன்று வேளை அருந்த காய்ச்சல் பறந்தோடும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . மேற்கண்ட மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . இவை கலந்த மருந்துகள் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடமும் கிடைக்கும் . வேண்டியவர்கள் பயன் பெறலாம்.
மேற்கண்ட மருந்துகள் சுரஹரகாரிகள் , வியதாபேதகாரிகளும் கூட எனவே அவற்றில் ஒன்றிரண்டு கிடைக்காவிட்டாலும் கூட கீழே இருக்கும் இரண்டும் அவசியம் சேர்த்து சாப்பிட்டாலே நலம் பயக்கும்.
விடாத காய்ச்சலுக்கு விஷ்ணு கிராந்தி
 படாத பாடு படுத்தும் காய்ச்சலுக்கு பற்பாடகம்
விராலியிலை
விராலியைப் பற்றி எழுதும் போது அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் போக முடியாது.ஏனென்றால் அவ்வளவு முக்கியமான மூலிகை. இந்த மூலிகை அதிகமாக வளர்ந்துள்ளதால் முருகன் குடி கொண்டு இருக்கும் மலைக்கு விராலி மலை என்று பெயர் .இந்த மலையில் அருணகிரி நாதருக்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.
மேலும் இந்த விராலிக் கட்டைகளை உள்ளே வைத்துத்தான் அதன் மீது களிமண்ணை அப்பி அக்காலத்தில் குடிசை வீடுகளுக்கு மண்ணால் சுவர் வைத்துக் கட்டுவார்கள். அந்தச் சுவர்கள் எந்த மழையிலும் நனைந்தாலும் நமது உடலில் எலும்புச் சட்டம் இருப்பது போல மண்ணுக்குள் இருந்து மண் கரைந்து போகாமல் காக்கும் . அவ்வளவு வல்லமையுள்ளது இந்த மூலிகை .இதே போல இது எலும்பையும் , எலும்பு மஞ்சையையும் , அதன் மூலம் இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியையும் காக்க வல்லது.எலும்பு முறிவிற்கும் , எலும்பு தேய்மானத்திற்கும் இதன் இலையை அரைத்து மேற்புறமாக பற்றிடலாம்.
ஏனென்றால் டெங்கு காய்ச்சலில் மரணம் நிகழ்வது இரத்தச் சிவப்பணுக்கள் டெங்கு கிருமிகளால் குறைபடுவதால்தான் .மேற்கண்ட இரு மருந்துகள் மட்டுமே காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதும் என்றால் இது இரத்தச் சிவப்பணுக்களை காப்பாற்ற இது அவசியம்.எனவே இதை அவசியம் சேர்த்தால் இரத்த சிவப்பணுக்களைக் காப்பாற்றி உயிரையும் காப்பாற்றும்.
இத்துடன் IMPCOPS  தயாரிப்பான ( 1 ) பிரம்மானந்த பைரவம் அல்லது (2) ஆனந்த பைரவமும் மூன்று வேளையும் ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம். இது அனைத்துக் காய்ச்சலுக்கும் குணம் செய்யும் . மலையப்பசாமி வைத்திய சாலை பழனி அவர்கள் தயாரிக்கும் சுர மாத்திரையையும் வாங்கியும் உபயோகிக்கலாம் .

டெங்கு காய்ச்சல் குணமாக



டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை
ஒரு தடிக் குச்சியினால் ஓங்கி ஓங்கி அடிக்கப்படுவது போன்ற அளவிற்குத் தீவிரமான வலி எலும்புகளிலும், கீல்களிலும் திடீரென்று ஏற்பட்டு வரும் காய்ச்சல் டெங்கு. சிலருக்கு காய்ச்சல் வாயு தோஷத்தினால் குளிர் நடுக்கத்துடன் தொடங்கும். அதனுடன் பித்த தோஷமும் சேர்ந்தால் சிறிது பிதற்றல் புலம்பலுடன் இருக்கும். ரத்தத்தின் கொதிப்பு அதிகமானால் காய்ச்சல் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நாட்களில் உடல் பூராவும் சிறு கடுகு போன்ற சிவந்த தடிப்புகள் அம்மை போல் கண்டு அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் மறைந்து போகும். ரத்தம் மற்றும் பித்தத்தில் விசேஷக் கெடுதல் ஏற்படாத மனிதர்களுக்கு இந்த அம்மை போன்ற சிவப்புத் தடிப்பு உண்டாவதில்லை. சிலருக்கு வயிற்றில் பித்தம் கெடுதலைச் செய்து உமட்டல், வாந்தியை உண்டாக்குகிறது.

கபதோஷத்தின் சீற்றத்தால் தொண்டைப்புண், கண்களில் வலி, இருமல், மூக்குச் சளி, தலைகனம் இவையும் பூட்டுகளில் உடல் பூராவும் விட்டுவிட்டு வலியும் வீக்கமும் சிலருக்குக் காணும். இரண்டு மூன்று நான்கு நாள்கள் வரையில் காய்ச்சல் அடித்துவிட்டு காய்ச்சல் மட்டும் திடீரென்று தணியும். தணியும் போது சிலருக்கு வியர்வை அதிகம் ஏற்படும். பேதியும் 3-4 தரம் சிலருக்கு ஏற்படும். காய்ச்சல் தணிந்தாலும் தடியடி போன்ற உடல் கை, கால் பகுதிகளில் வலி மட்டும் குறைவதில்லை. திரும்பவும் காய்ச்சல் தீவிரமாகவும் அதிக வலியுடனும் ஏற்படும். ஆனால் மொத்தம் 8 நாள்களுக்கு மேல் பொதுவாக இந்தக் காய்ச்சல் நீடிப்பதில்லை. காய்ச்சல் விட்டாலும் கை, கால் விரல் ஸந்தி முதல் பெரிய எலும்புகள் அதன் பூட்டுகளில் எல்லாம் வலி மட்டும் சிலருக்கு நாள் கணக்காய், வாரம் அல்லது மாசக்கணக்காய் கூட நீடிக்கும்.

தடி போட்டு அடிப்பது போல் எலும்புகளில் வலி இருப்பதால் டெங்கு காய்ச்சலுக்கு ‘தண்டக காய்ச்சல்‘ என்று ஆயுர்வேதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

பழைய கால ஆயுர்வேதப் புத்தகங்களில் டெங்கு காய்ச்சல் பற்றி விவரிக்கப்படவில்லை. அதனால் ஆயுர்வேத மருத்துவர்களால் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கூற முடியாது என்று ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. புதிது புதிதாக வரும் எந்தவிதமான நோய்க்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை சிறந்த முறையில் தாராளமாய் செய்ய முடியும். சூரியனின் பிரகாசம் போல் என்றும் மாற முடியாத வாயு பித்தம் கபம் ஆகிய திரிதோஷ தத்துவங்களை வைத்துக்கொண்டு புதிய நோய்களைச் சிரமமின்றிக் குணம் செய்யலாம்.

வாதமும் கபமும் சீற்றமடைந்து ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலில் கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, சுக்கு, வெண்கோஷ்டம் இவற்றைக் கொண்டு கஷாயம் முறைப்படி செய்து தினம் 3-4 வேளை சாப்பிடலாம். மருந்துகள் வகைக்கு 5 கிராம், 160 மிலி. தண்ணீர் விட்டு, 50 மிலி. குறுக்கிச் சாப்பிட விரைவில் காய்ச்சல், உடல் வலி நீங்கும்.
தேவதாரு, பர்ப்பாடகம், சிறுதேக்கு, கோரைக் கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி விதை, கடுக்காய், சுக்கு, ஓமம், திப்பிலி இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயமும் சாப்பிடலாம்.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்கப்படும் தசமூல கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.

பித்த தோஷத்தின் சேர்க்கையினால் அம்மைபோல் சிவப்பு தடிப்பு முதலியன இருந்தால் நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிகமதுரம், விலாமிச்சம் வேர் கஷாயம் நல்ல குணம் தரும்.

கபத்தின் தொந்தரவால் இருமல், நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம் இருந்தால் மகாதான்வந்திரம் அல்லது வாயு குளிகை ஒன்றை தேன் குழைத்து கஷாயத்துடன் சாப்பிட விரைவில் காய்ச்சல், வலி குறையும். காய்ச்சல் விட்ட பிறகு உடனேயே புஷ்டி பலம், ரத்த அணுக்கள் வளர அசுவகந்தாதி சூரணம், தசமூலாரிஷ்டம், அசுவகந்தாரிஷ்டம் போன்ற மருந்துகளைச் சாப்பிடுவது நன்மையாகும்.