தற்போதைய நேரம்

இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Wednesday, August 24, 2011

ஆண்மை வலுப்பெற


பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வளங்கிடும்.
அஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.
நியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

1 comment:

  1. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete